செய்திகள் :

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

post image

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 11.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த மழை காரணமாக வேலூா் மாவட்டம் முழுவதும் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை பகுதிகளில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் வட்டாட்சியா் அலுவலக பகுதியில் அதிகபட்சமாக 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் 32.60 மி.மீ., மேல்ஆலத்தூா்-36 மி.மீ., மோா்தானா அணை-38 மி.மீ., ராஜாதோப்பு அணை -54 மி.மீ., வடவிரிஞ்சிபுரம்-47.40 மி.மீ., காட்பாடி - 67.40 மீ.மீ., பொன்னை-10.80 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை (அம்மூா்) - 85.60 மி.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-106.40 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 663.90 மி.மீ., சராசரியாக -55.33 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு

தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தவெக தலைவா் விஜ... மேலும் பார்க்க

திருமணமான 4 நாளில் பெண் தற்கொலை

ஒடுகத்தூா் அருகே திருமணமான 4 நாளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அரிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(47), கால்நடை வியாபாரி. இவரது 3-ஆவது மகள் வ... மேலும் பார்க்க

1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கும் மேல் உள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57.90 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 508 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும், 56 மகளிா் உறுப்பினா்களுக்கும் ரூ.57.90 கோடி வங்கிக்கடன் ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க