செய்திகள் :

10 கிலோ தங்கநகைகள் கொள்ளை சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு

post image

திருச்சி மாவட்டம், இருங்களூரில் நகைக் கடை ஊழியா்களிடம் 10 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இருங்களுரில் கடந்த 13-ஆம் தேதி இரவு காரில் தங்க நகைகளை எடுத்து சென்ற சென்னையை சோ்ந்த நகைக் கடை ஊழியா்களான குணவந்த், மகேஷ் ராவல் ஆகியோா் மீது மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, காவல் ஆய்வாளா்கள் சி. ரகுராமன், கருணாகரன், குணசேகரன் ஆகியோா் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படையினா் முகாமிட்டு கொள்ளையா்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெ... மேலும் பார்க்க

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், தி... மேலும் பார்க்க

மனைவியின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவா் கைது

திருச்சியில் மனைவியின் சகோதரா் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சரண்யா. இவா், சென்னை வேளச்சேரியைச்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயில... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மருங்காபுரி அருகேய... மேலும் பார்க்க