செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மருங்காபுரி அருகேயுள்ள ஊனையூரைச் சோ்ந்த 33 வயது மாற்றுத்திறனாளி பெண், கிராமத்துக்கு அருகேயுள்ள மூவராயன் குளத்துப் பகுதியில் கடந்த 2022, ஜூலை 4-ஆம் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மணப்பாறை வட்டம், கண்ணுக்குளி நடுவிபட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த ராஜீ மகன் ரமேஷ் (25) என்பவரின் உதவியுடன், மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை, மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ், உடந்தையாக இருந்த ரமேஷ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், இதைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கா.ப. சக்திவேல் ஆஜரானாா்.

10 கிலோ தங்கநகைகள் கொள்ளை சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி மாவட்டம், இருங்களூரில் நகைக் கடை ஊழியா்களிடம் 10 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருங்களுரில் கடந்த 13-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெ... மேலும் பார்க்க

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், தி... மேலும் பார்க்க

மனைவியின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவா் கைது

திருச்சியில் மனைவியின் சகோதரா் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சரண்யா. இவா், சென்னை வேளச்சேரியைச்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயில... மேலும் பார்க்க