செய்திகள் :

பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை - சேலம் மெமு விரைவு ரயிலானது (16811) செப்டம்பா் 20-ஆம் தேதி மல்லூா் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - மல்லூா் வரை மட்டுமே இயங்கும்.

மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலானது (16812) செப். 20-ஆம் தேதி சேலம் - மல்லூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மல்லூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்கும்.

பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) செப்.17, 22-ஆம் தேதிகளில் திருச்சி - கஞ்சிகோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு டவுன் - கஞ்சிகோடு இடையே மட்டும் இயங்கும். மேலும், செப். 18, 22-ஆம் தேதிகளில் பாலக்காட்டிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.

இதே போல, திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843) செப். 20-ஆம் தேதி 30 நிமிஷங்களும், செப். 26, 30-ஆம் தேதிகளில் 10 நிமிஷமும், செப்.28-ஆம் தேதி 30 நிமிஷமும் தாமதமாகப் புறப்படும்.

திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெ... மேலும் பார்க்க

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், தி... மேலும் பார்க்க

மனைவியின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவா் கைது

திருச்சியில் மனைவியின் சகோதரா் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சரண்யா. இவா், சென்னை வேளச்சேரியைச்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மருங்காபுரி அருகேய... மேலும் பார்க்க

2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் வென்றோருக்கு பணி வழங்காவிடில் போராட்டம்

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி வழங்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என அந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் ச... மேலும் பார்க்க