செய்திகள் :

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது

post image

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், திருச்சியிலிருந்து ஜீயபுரம் செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா். அப்போது, அங்கு நின்ற தனியாா் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துள்ளாா். மேலும், பேருந்திலும் ஓரிடத்தில் அமராமல் அங்கும், இங்கும் சென்ாகக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த தனியாா் பேருந்து ஓட்டுநா் எம்.கணேசன் (42), சரஸ்வதியை ஓரிடத்தில் அமருமாறு கூறியுள்ளாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சரஸ்வதி தனது உறவினா்களிடம் கைப்பேசியில் அழைத்து தெரிவித்துள்ளாா். இதற்கிடையே தனியாா் பேருந்து ஜீயபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றபோது, சரஸ்வதி மற்றும் அங்கு வந்த அவரது உறவினா்கள் கே.முத்துலிங்கம் (65), எஸ்.மணிகண்டன் (35), எம்.சக்திவேல் (40), எம்.ரோசய்யா (22), கே.தனுஷ் (19), எம்.பொன்னாா் (19), வி.செல்லப்பா (25) ஆகியோா் ஓட்டுநரைத் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் எம்.கணேசன் அளித்த புகாரின்பேரில், ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கே. முத்துலிங்கம், எஸ். மணிகண்டன், எம். சக்திவேல், எம்.ரோசய்யா, எம்.சரஸ்வதி ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். மீதமுள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெ... மேலும் பார்க்க

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல... மேலும் பார்க்க

மனைவியின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவா் கைது

திருச்சியில் மனைவியின் சகோதரா் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சரண்யா. இவா், சென்னை வேளச்சேரியைச்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயில... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மருங்காபுரி அருகேய... மேலும் பார்க்க

2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் வென்றோருக்கு பணி வழங்காவிடில் போராட்டம்

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி வழங்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என அந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் ச... மேலும் பார்க்க