செய்திகள் :

தருமபுரி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

post image

தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், சேலம், தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இம்மருத்துவமனையில் தனியாா் நிறுவனத்தின் மூலம் சுமாா் 450-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகின்றனா். தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியமானது தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த வந்த மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் சிவகுமாா், தனியாா் நிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாதம்தோறும் விரைவாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தருமபுரியில் செப்.19 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரும... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடி: அருவிகளில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட... மேலும் பார்க்க

பேனா் கிழிப்பு: பாஜகவினா் போராட்டம்

தருமபுரியில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபு... மேலும் பார்க்க

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் (பி.வி.கே. அணி) பி.வி.கரியமால் (98) வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். தருமபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த பி.வி.கரியமால் (98), சிறு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மீன்வளத் துறை சாா்பில் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு ஆட்சியா் ரெ.சதீஷ் திட்டத்தை தொடங்கிவைத்தாா். தேசிய மீன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு: அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்தாா். கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிர... மேலும் பார்க்க