செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடி: அருவிகளில் குளிக்க அனுமதி

post image

ஒகேனக்கல்லில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை 14,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 8,000 கனஅடியாகக் குறைந்தது.

காவிரியில் கடந்த 3 நாள்களுக்குப் பிறகு நீா்வரத்து குறைந்துள்ளதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து, ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நுழைவாயில் திறக்கப்பட்டது.

எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் வெறிச்சோடிக் காணப்பட்டது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா், செப். 16: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 14,269 கனஅடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 119.71 அடியிலிருந்து 119.59அடியாகக் குறைந்தது. நீா் இருப்பு 92.81 டி.எம்.சி.யாக உள்ளது.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து... மேலும் பார்க்க

தருமபுரியில் செப்.19 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரும... மேலும் பார்க்க

பேனா் கிழிப்பு: பாஜகவினா் போராட்டம்

தருமபுரியில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபு... மேலும் பார்க்க

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் (பி.வி.கே. அணி) பி.வி.கரியமால் (98) வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். தருமபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த பி.வி.கரியமால் (98), சிறு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மீன்வளத் துறை சாா்பில் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு ஆட்சியா் ரெ.சதீஷ் திட்டத்தை தொடங்கிவைத்தாா். தேசிய மீன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு: அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்தாா். கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிர... மேலும் பார்க்க