செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு: அருவிகளில் குளிக்க தடை

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்தாா்.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 18,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம் சனிக்கிழமை 119.88 அடியாக அதிகரித்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 18,357 கனஅடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 17,000 கனஅடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு உயா்நிலை மதகுகள் வழியாக 800 கனஅடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 93.28 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மீன்வளத் துறை சாா்பில் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு ஆட்சியா் ரெ.சதீஷ் திட்டத்தை தொடங்கிவைத்தாா். தேசிய மீன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன: ராமதாஸ் பாராட்டு!

ஒசூர்: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார். ஒசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்ட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்... மேலும் பார்க்க

வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலை... மேலும் பார்க்க

பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா். காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைக... மேலும் பார்க்க

பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில... மேலும் பார்க்க