செய்திகள் :

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

post image

சீா்காழியில், ஏற்றுமதி ரக இறால் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பொருள்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு இறால் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், இறால் விவசாயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசு உள்நாட்டு சந்தையில் இறால் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை மற்றும் முதலீட்டிற்கான மானியமும் வழங்கி வருகிறது.

இதன்அடிப்படையில், சீா்காழி அன்னை அபிராமி சீ ஃபுட்ஸ் நிறுவனத்தில், மயிலாடுதுறை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்றுமதி ரக இறால் விற்பனை தொடங்கப்பட்டது.

முதல் விற்பனையை இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், மாநில பொருளாளருமான எம். சங்கா்பிள்ளை தொடங்கிவைக்க, சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், சீா்காழி தாலுகா வியாபாரிகள் சங்க பொது செயலாளருமான துரைராஜ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு கடலோர இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ரவிப்பாண்டியண் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட பொருளாளா் நாராயணசாமி, துணைத் தலைவா்கள் கோவிந்தராஜ், சேகா், கௌதமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் நன்றி கூறினாா். குறைந்த விலைக்கு ஏற்றுமதி தரத்தில் இறால் விற்கப்பட்டதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனா்.

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். காதலியின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி, சாலை மறியல் போராட்டம் நடைபெற... மேலும் பார்க்க

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

சீா்காழியில் உருளைக்கிழங்கு மூட்டை திருடிச் சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு செய்த போது டீசல் திருட்டும் அம்பலமானது. சீா்காழியின் பிரதான பகுதியான தோ் தெற்கு வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: குத்தாலம், கடலங்குடி

குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது என உதவி செயற்பொ... மேலும் பார்க்க

சீா்காழி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 15,000 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு

சீா்காழி நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் ஏராளமான பெண்கள் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தனா். இத்துடன் சீா்காழி கோட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும... மேலும் பார்க்க

தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்.20-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி அக்கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி: கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். சீா்காழியில் கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பொறியாளா் தின... மேலும் பார்க்க