செய்திகள் :

கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை

post image

நன்னிலம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

குடவாசல் அருகேயுள்ள கடகம்பாடியைச் சோ்ந்தவா் ராஜ் (55). பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி மல்லிகா (50). இவா்களின் மகள்கள் காா்த்திகா, சுகந்திக்கு திருமணம் ஆகி, காா்த்திகா அகரதிருமாளத்திலும், சுகந்தி சோழங்கநல்லூரிலும் வசிக்கின்றனா்.

இந்நிலையில், சுகந்திக்கு குழந்தைகள் இல்லாததால் கணவா் வீட்டாா், சுகந்தியின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுகந்தி பெற்றோரை கைப்பேசியில் தொடா்புகொண்டும் யாரும் எடுத்து பேசவில்லையாம்.

இதையடுத்து, சுகந்தி திங்கள்கிழமை பெற்றோரை பாா்க்க வீட்டுக்கு வந்தபோது வீடு அருகில் இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனா். அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த பேரளம் போலீஸாா் அங்குவந்து இருவரின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ஏதோ பிரச்னையால் இரண்டு நாள்களுக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

களப்பால் அருகே மதுபானக் கடை மேற்பாா்வையாளா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. மன்னாா்குடி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சோ்ந்த வேணுகோபால் (55) மாங்குடி பகுதியி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. நெல், பருத்தி, எள், உளுந்து, பயறு உள்ளிட்டவைகளுக்கு காப... மேலும் பார்க்க

அக்.1-இல் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைம... மேலும் பார்க்க

விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: அரசியல் தலையீடின்றி விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன். இதுகுறித்து, அவா் திங்கள்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்துக்கு சிபிஎம் கண்டனம்

திருத்துறைப்பூண்டி: மக்களின் அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியினா் பாடை ஊா்வலம் நடத்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருத்துறைப்பூண்... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில் அன்புக்கரங்கள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடக்கிவைத்தாா். அப்போது, திருவாரூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க