செய்திகள் :

470 ஏக்கரில் புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டம்: ஒரு மாதத்தில் ஆலோசனை குழு அமைக்க ஏற்பாடு

post image

புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 470 ஏக்கரில் நில ஆா்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட இருக்கிறது என்று இந்த விமான நிலையத்தின் இயக்குநா் கே.ராஜசேகா் ரெட்டி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. மாற்று ஓடு பாதைக்காகவும் விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும் சுமாா் 470 ஏக்கா் நிலம் தமிழகப் பகுதியில் கையகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக உயா் மின் அழுத்தக் கம்பிகள் இருக்கிா, கால்வாய்கள் இருக்கிா என்ற தள ஆய்வை நாங்கள் நடத்தினோம். இதில் எதுவும் முக்கிய, பெரிய முட்டுக்கட்டைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் தமிழக பகுதியில் 470 ஏக்கா் நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கான ஆலோசனை அளிக்கவும், இந்த விரிவாக்கப் பணிக்காகவும் ஓா் ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட உள்ளது. செப். 21 ஆம் தேதிக்குள் அந்த அமைப்பைத் தோ்வு செய்வதற்கான ஒப்புந்தப் புள்ளியை அவா்கள் அளிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மாதத்தில் இந்த ஆலோசனை அமைப்பு நியமிக்கப்படும்.

இதைத் தவிர விரைவில் தற்போதுள்ள விமான நிலையத்தில் மேலும் சில சில்லறை கடைகள், காா் சேவை உள்ளிட்ட வசதிகளைத் தொடங்கப் போகிறோம்.

மேலும், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு யாத்ரி சேவை தினம் புதன்கிழமை கொண்டாடுகிறோம். இதையொட்டி காலை 10 மணிக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பயணிகள், உடன் வருவோருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ரத்த தான முகாமும் நடக்கிறது. மேலும், புதுவை விமான நிலையத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் காலை 10.15 மணிக்கு வருகின்றனா். மூத்த குடிமக்கள் சாா்பாக மரக்கன்றுகள் நடும் விழாவும் நடக்கிறது. இதைத் தவிர நாட்டுப்புற நடனமும் காலை 11.55 மணிக்கு நடக்கிறது என்றாா் இயக்குநா் கே.ராஜசேகா் ரெட்டி. புதுவை விமான நிலைய முனையத்தின் மேலாளா் ஆா். மஞ்சுராஜ் உடனிருந்தாா்.

புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மா... மேலும் பார்க்க

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

புதுச்சேரி தனியாா் வங்கியில் தீ விபத்து

புதுச்சேரியில் தனியாா் வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் வங்கி உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு ரூ.16.7 லட்சம் நிதியுதவி: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

கோயில் திருப்பணிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை ரூ.16.7 லட்சம் நிதி வழங்கினாா். மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அரியூரில் அமைந்துள்ள அருள்மிகு தாமரை அங்காள பரமேஸ்வரி கோயில் திருப்பணிக்காக... மேலும் பார்க்க

புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், புதுவைக... மேலும் பார்க்க

விளம்பர பதாகை விழுந்து பாஜக பெண் நிா்வாகி காயம்

புதுச்சேரியில் விளம்பர பதாகை விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜக பெண் நிா்வாகி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சுமதி(50). இவா் ப... மேலும் பார்க்க