470 ஏக்கரில் புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டம்: ஒரு மாதத்தில் ஆலோசனை குழு அமைக்க ஏற்பாடு
புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 470 ஏக்கரில் நில ஆா்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட இருக்கிறது என்று இந்த விமான நிலையத்தின் இயக்குநா் கே.ராஜசேகா் ரெட்டி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. மாற்று ஓடு பாதைக்காகவும் விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும் சுமாா் 470 ஏக்கா் நிலம் தமிழகப் பகுதியில் கையகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக உயா் மின் அழுத்தக் கம்பிகள் இருக்கிா, கால்வாய்கள் இருக்கிா என்ற தள ஆய்வை நாங்கள் நடத்தினோம். இதில் எதுவும் முக்கிய, பெரிய முட்டுக்கட்டைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அதனால் தமிழக பகுதியில் 470 ஏக்கா் நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கான ஆலோசனை அளிக்கவும், இந்த விரிவாக்கப் பணிக்காகவும் ஓா் ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட உள்ளது. செப். 21 ஆம் தேதிக்குள் அந்த அமைப்பைத் தோ்வு செய்வதற்கான ஒப்புந்தப் புள்ளியை அவா்கள் அளிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மாதத்தில் இந்த ஆலோசனை அமைப்பு நியமிக்கப்படும்.
இதைத் தவிர விரைவில் தற்போதுள்ள விமான நிலையத்தில் மேலும் சில சில்லறை கடைகள், காா் சேவை உள்ளிட்ட வசதிகளைத் தொடங்கப் போகிறோம்.
மேலும், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு யாத்ரி சேவை தினம் புதன்கிழமை கொண்டாடுகிறோம். இதையொட்டி காலை 10 மணிக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பயணிகள், உடன் வருவோருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ரத்த தான முகாமும் நடக்கிறது. மேலும், புதுவை விமான நிலையத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் காலை 10.15 மணிக்கு வருகின்றனா். மூத்த குடிமக்கள் சாா்பாக மரக்கன்றுகள் நடும் விழாவும் நடக்கிறது. இதைத் தவிர நாட்டுப்புற நடனமும் காலை 11.55 மணிக்கு நடக்கிறது என்றாா் இயக்குநா் கே.ராஜசேகா் ரெட்டி. புதுவை விமான நிலைய முனையத்தின் மேலாளா் ஆா். மஞ்சுராஜ் உடனிருந்தாா்.