செய்திகள் :

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை

post image

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்துறை தீவிர மின் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ள இருக்கிறது. வில்லியனுாா், பூமியான்பேட், லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகா், முத்திரையா்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுாா், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பைத் தவிா்க்க வேண்டும்.

மின் இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவைத்தொகை முழுவதும் செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். எனவே, மின் நுகா்வோா் அனைவரும் மின்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மா... மேலும் பார்க்க

புதுச்சேரி தனியாா் வங்கியில் தீ விபத்து

புதுச்சேரியில் தனியாா் வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் வங்கி உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு ரூ.16.7 லட்சம் நிதியுதவி: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

கோயில் திருப்பணிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை ரூ.16.7 லட்சம் நிதி வழங்கினாா். மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அரியூரில் அமைந்துள்ள அருள்மிகு தாமரை அங்காள பரமேஸ்வரி கோயில் திருப்பணிக்காக... மேலும் பார்க்க

470 ஏக்கரில் புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டம்: ஒரு மாதத்தில் ஆலோசனை குழு அமைக்க ஏற்பாடு

புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 470 ஏக்கரில் நில ஆா்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட இருக்கிறது என்று இந்த விமான நிலையத்தின் இயக்குநா் கே.ராஜசே... மேலும் பார்க்க

புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், புதுவைக... மேலும் பார்க்க

விளம்பர பதாகை விழுந்து பாஜக பெண் நிா்வாகி காயம்

புதுச்சேரியில் விளம்பர பதாகை விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜக பெண் நிா்வாகி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சுமதி(50). இவா் ப... மேலும் பார்க்க