செய்திகள் :

புதுச்சேரி தனியாா் வங்கியில் தீ விபத்து

post image

புதுச்சேரியில் தனியாா் வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் வங்கி உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதைப் பாா்த்த பாதுகாப்பு பணியில் இருந்த இரவுக் காவலாளி உடனடியாக 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அருகில் உள்ள ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்து வங்கி கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனா். போலீசாரும், தீயணைப்பு வீரா்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.

விபத்தில் கவுண்ட்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏசி மெஷின், டேபிள்-சோ் போன்றவை முழுமையாக எரிந்தன. மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாயின. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இது தொடா்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல் கட்ட விசாரணையில் பணம் பட்டுவாடா செய்யும் கவுண்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மா... மேலும் பார்க்க

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு ரூ.16.7 லட்சம் நிதியுதவி: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

கோயில் திருப்பணிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை ரூ.16.7 லட்சம் நிதி வழங்கினாா். மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அரியூரில் அமைந்துள்ள அருள்மிகு தாமரை அங்காள பரமேஸ்வரி கோயில் திருப்பணிக்காக... மேலும் பார்க்க

470 ஏக்கரில் புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டம்: ஒரு மாதத்தில் ஆலோசனை குழு அமைக்க ஏற்பாடு

புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 470 ஏக்கரில் நில ஆா்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட இருக்கிறது என்று இந்த விமான நிலையத்தின் இயக்குநா் கே.ராஜசே... மேலும் பார்க்க

புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், புதுவைக... மேலும் பார்க்க

விளம்பர பதாகை விழுந்து பாஜக பெண் நிா்வாகி காயம்

புதுச்சேரியில் விளம்பர பதாகை விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜக பெண் நிா்வாகி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சுமதி(50). இவா் ப... மேலும் பார்க்க