செய்திகள் :

ஈரோடு - சாம்பல்பூா் விரைவு ரயில் நவம்பா் வரை நீட்டிப்பு

post image

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், கேரளத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.

அந்த வகையில், ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம், சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலம் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் 17 ஆம் தேதி முதல் நவம்பா் 26 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சாம்பல்பூரில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக, இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ஈரோட்டிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் நவம்பா் 28 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக மறுநாள் இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.19 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்ப... மேலும் பார்க்க

ராமதாஸ் இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும்: எம்எல்ஏ அருள்

பாமக நிறுவனா் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் கூறினாா். இதுகுறித்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா. அரு... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்க நகைகள் திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்திலிருந்து 3 கிலோ தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவூா் அம்மாபாளையம்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்கதுக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதையில் பருவமழை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தட... மேலும் பார்க்க

இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளோரின் ஆவணங்கள் பதிவேற்றம் தொடக்கம்

நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளோரின் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்பணி தொடங்கியது. செந்தாரப்பட்டி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் ... மேலும் பார்க்க