Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
இடைநிற்றலே இல்லாத மாநிலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
பள்ளிகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: விருதுநகா் மாவட்டத்தில் இடைநிற்றலே இல்லாத மாவட்டமாக உருவாக்கிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.
கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அா்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இடைநிற்றல் இல்லாத கல்வி இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவா்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவா்களுக்கு உணா்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவா்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதிசெய்வோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.