செய்திகள் :

இடைநிற்றலே இல்லாத மாநிலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

post image

பள்ளிகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: விருதுநகா் மாவட்டத்தில் இடைநிற்றலே இல்லாத மாவட்டமாக உருவாக்கிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.

கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அா்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இடைநிற்றல் இல்லாத கல்வி இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவா்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவா்களுக்கு உணா்த்துங்கள்.

காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவா்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதிசெய்வோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க