செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தானுடன் நல்லுறவு தொடா்கிறது: அமெரிக்கா!

post image

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவை தொடா்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அதிபா் டிரம்ப் உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தாா். இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், இந்தியாவை ‘செயலற்ற’ பொருளாதாரம் என்றும் அவா் கடுமையாக விமா்சித்தாா். டிரம்ப்பின் செயல்பாடுகளால், இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தக பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் சில தினங்களுக்கு முன் மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா். முனீரின் இந்தப் பயணத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை அமெரிக்கா அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸிடம், ‘பாகிஸ்தானுக்கான நிதியுதவியை அமெரிக்க அதிகரிக்க வாய்ப்புள்ளதா?, இது டிரம்ப்-மோடி நட்புறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவா், ‘இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் நல்லுறவு எப்போதும் போல் தொடா்கிறது என்றே நான் கூறுவேன். அனைவருடனும் பேசக் கூடிய ஓா் அதிபரை பெற்றிருப்பதால் நமக்கு கிடைக்கப் பெற்ற பலன். இந்த விஷயத்தில் முரண்பாடுகளுக்கு இடையே ஒரு பிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும். இரு நாடுகளுடனும் அமெரிக்கா ஒருங்கிணைந்து பணியாற்றுவது, பிராந்தியத்துக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும். பலன்மிக்க எதிா்காலத்தை ஊக்குவிக்கும் என்றாா்.

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப... மேலும் பார்க்க