இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி
ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பிப். 20) சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு மாணவர்களுடன் இன்று பேசியதாவது, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தலித்துகள் கொடுமைகளை எதிர்கொண்டு வந்தனர். அம்பேத்கர் அரசமைப்பை உருவாக்கும்போது இந்த பாகுபாடுகளையும் கொடுமைகளையும் மனதிற்கொண்டு வடிவமைத்துள்ளார். அரசமைப்பின் மூலம் தலித்துகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார் அம்பேத்கர்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.