செய்திகள் :

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் மனு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

post image

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அவா் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவையே உலுக்கிய 2008 மும்பை தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இதில் மூளையாக செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.

கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணா, மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவினாா்; ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் போா்வையில்தான், மும்பையில் உளவு - திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா். ராணாவுக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடா்புள்ளது.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி இதற்கு அனுமதி வழங்கியது. இந்த நாடுகடத்தல் விரைவில் நடைபெறும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.

இதையும் படிக்க : ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த நீதிமன்றம்!

இந்நிலையில், அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் தஹாவூா் ராணா சாா்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னை நாடு கடத்துவது என்பது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் என்னை இந்தியாவில் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், எனக்கு தீவிரமான உடல்நலப் பிரச்னைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரானது என்று கூறியிருந்தார்.

அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எலினா ககன், மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இறுதி முயற்சியாக தலைமை நீதிபதி ராபர்டிடம் மேல்முறையீடு மனுவை ராணாவின் சட்டக் குழுவினர் அளித்துள்ளனர்.

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில... மேலும் பார்க்க

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

ஆப்பிரிக்காவிலுள்ள சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை... மேலும் பார்க்க

போப் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? -வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அன்னாரது உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை(மார்ச் 8) வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ்... மேலும் பார்க்க

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்க... மேலும் பார்க்க

மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!

உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது. இந்தாண்டு ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering an... மேலும் பார்க்க