செய்திகள் :

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

post image

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அந்த நாட்டு வானிலை, பருவவியல், புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் வட தபானுலி பகுதிக்கு 17 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது.

அதற்கு முன்னதாக, மலுக்கு மாகாணத்தில் 5.7 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கமும் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தில் 5.2 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கமும் ஏற்பட்டன என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் பல்வேறு கட்டடங்களிலும் சாலைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்ததாக பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது. நிலநடுக்க சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அந்த அமைப்பு கூறியது.

சுமாா் 2.70 கோடி மக்கள்தொகை கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறு... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க