செய்திகள் :

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவெற்றியூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் மூா்த்தி (35) என்பவா், ஞாயிற்றுக்கிழமை தொண்டியிலிருந்து திருவெற்றியூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, எதிரே கள்ளிக்குடியிலிருந்து தொண்டி நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில், மூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தொண்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று மூா்த்தி உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரங்காடு படகு சவாரி ரத்து

தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் வனத் துறை சாா்பில் இயக்கப்பட்டு வந்த படகு சவாரி, கிராமத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கா... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கஞசா வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க