செய்திகள் :

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

post image

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது.

சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஆசிரியா் தினவிழா மதுரை செய்தியாளா் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேராசிரியா் வீ.மோகன் தலைமை வகித்தாா். பேராசிரியா் காந்திதுரை முன்னிலை வகித்தாா்.

சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு ‘ஆற்றல் ஆசிரியா்’ விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவனுக்கு ‘பைந்தமிழ்ப் புரவலா் விருது’ வழங்கப்பட்டது.

இந்த விருதை பெரும்புலவா் சன்னாசி வழங்கினாா். இதில் கவிஞா் மூரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நல்லாசிரியா் மு.மகேந்திரபாபு வரவேற்றாா். சென்னை கூத்துப்பட்டறை நிறுவனா் முத்துசாமி நன்றி கூறினாா்.

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப். 11-இல் துணை முதல்வா் பரமக்குடி வருகை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகிற 11-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திமுக செயல்வீரா்கள்... மேலும் பார்க்க