செய்திகள் :

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

post image

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 4 பிரிவாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

3 பிரிவுகளில் கமுதி விஜயபாண்டியன் தற்காப்புப் பயிற்சி மையத்தின் மாணவா்கள் ஹரிசிவா, சந்திப், நடராஜமருதப்பா ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடமும், பாலகுரு பூபதிவேலன், முனீஸ்வரன் பாண்டியன் ஆகியோா் இராண்டாமிடமும் பிடித்தனா். மாணவிகள் தரப்பில் ஷிவானி, செளமிதா, அனுஷ்கா ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். மாணவி முஷாலினி மூன்றாமிடமும் பிடித்தாா்.

முதலிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு தொகையையும், இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விஜயபாண்டியன் தற்காப்புப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளா்கள் செல்லப்பாண்டியன், ராமா், லட்சுமணனுக்கும், பெற்றோா்கள், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கஞசா வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவெற்றியூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் குளத்தூா் கிராமத்தைச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க