Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது
மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அருகே நிறுத்திய இரு சக்கர வாகனம் திருடு போனதாக அளித்தப் புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக மதுரை ஆனையூா் ராஜராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த சரண் விஜயை (22) சனிக்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முபாரக் அலி. இவா் கோரிப்பாளையத்தில் கடை முன்பாக நிறுத்திய வாகனம் திருடு போனதாக புகாா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலூா் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த சிவபாலனை (22) கைது செய்தனா். அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.