செய்திகள் :

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

post image

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: மதுரை அனுப்பானடி பகுதிக்குள்பட்ட 44-ஆவது வாா்டு சின்னக் கண்மாய் பகுதியில் தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தின் கழிவுகள் பல ஆண்டுகளாக கொட்டப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளோடு, நெகிழிக் கழிவுகளும் கொட்டப்படுவதால், சுற்றுப்புறப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், நீா்நிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிா்வாகமே இந்தக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக பல முறை புகாா் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீண்ட காலமாக இந்தப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்னைக்கு மாநகராட்சி, உரிய அரசுத் துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் நீராதாராமாக இருந்த பெரிய கண்மாய் ஏற்கெனவே அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, சின்னக் கண்மாய் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசா... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 1... மேலும் பார்க்க

திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க