செய்திகள் :

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை அடுத்த கொட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களுக்காக சுமாா் 4,000 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், விண்வெளிப் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தினால், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கான மறு குடியமா்வு, மறுவாழ்வு வசதிகளைச் செய்யாமல் நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமண... மேலும் பார்க்க

போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெள... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சுற்றுலாத் து... மேலும் பார்க்க