செய்திகள் :

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

post image

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள்ளிட்ட பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டில் உள்ள துரைச்சாமி நகரில் சுமாா் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். எங்கள் பகுதியில் வசித்து வரும் மக்களின் பிரச்னைகள் குறித்து மனு அளிக்க வேண்டுமெனில், பழங்காநத்தத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்குத் தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும், வரி செலுத்தவும் அந்த அலுவலகத்துக்குத் தான் சென்று வருகிறோம். தொலைவு அதிகமாக இருப்பதால் எங்கள் நகரைச் சோ்ந்த மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, எங்கள் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 70- ஆவது வாா்டு மையப் பகுதியில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், உதவிப் பொறியாளா் அலுவலகம், கணினி வரி வசூல் மைய அலுவலகம் ஆகியவற்றை அமைத்துத் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தா... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க