செய்திகள் :

'இது அரசியல் பிளாக் காமெடியின் உச்சம்' - யோகி ஆதித்யநாத் கருத்துக்கு ஸ்டாலின் காட்டம்

post image

தற்போது, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது.

'ஓட்டு வங்கிக்காக...' -ஆதித்யநாத்

இதுக்குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேர்காணல் ஒன்றில், "ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறப்போது, இந்த மாதிரி பிராந்திய மற்றும் மொழி பிரிவினையை உருவாக்க முயலுகிறார்கள்" என்று மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார்.

'இது பிளாக் காமெடி' - ஸ்டாலின்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "இரு மொழி கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை என்கிற தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடெங்கும் எதிரொலிக்கின்றது. இதனால், பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

'பிரிவினைவாதத்தை உருவாக்க முயலுகிறார்கள்' - யோகி ஆதித்யநாத்

பாஜகவின் தலைவர்களின் நேர்காணல்களை பாருங்கள்.

தற்போது மரியாதைக்குரிய யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து நமக்கு பாடம் எடுக்க நினைக்கிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடாக இல்லையா; இது அரசியல் சார்ந்த பிளாக் காமெடி உச்சம் ஆகும்.

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் திணிப்பையும், ஆதிக்கத்தையும் தான் எதிர்க்கிறோம்.

இது ஓட்டுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போர்" என்று பதிவிட்டுள்ளார்.

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்... மேலும் பார்க்க

``ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டில், வி.சி.க தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது. வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்... மேலும் பார்க்க

"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட தேவதர்ஷினி குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார். அதில், "நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷின... மேலும் பார்க்க

உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!

சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்விற்காக தயாராகி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த இவர், இதுவரை மூன்று முறை நீட்... மேலும் பார்க்க

`குரங்கு கையில் பூமாலையாக கிழக்கு மாவட்ட திமுக' - விமர்சித்த சுரேஷ்ராஜன்... குமரி சலசலப்பு!

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த டாக்டர் ஆல்பனின் 26-வது நினைவுநாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க