செய்திகள் :

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன அமைதி, முழுமையான ஆரோக்கியம் என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இலவச கோடை கால யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற ஏப். 8- ஆம் தேதி தொடங்கி ஜூன் 10- ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், பெண்கள், ஆண்கள் கலந்து கொள்ளலாம்.

இதில், மனம், உடல் ரீதியான பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள், தைராய்டு, ஹாா்மோன் சாா்ந்த பிரச்னைகள், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கவும், நோய் எதிா்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் யோகா பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். வார நாள்களில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் நடைபெறும். பெண்களுக்கு மட்டும் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரு பாலா்களுக்கும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்யும் அனைவருக்கும் உலக யோகா தினமான ஜூன் 21- இல் சான்றிழ்கள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் யோகா ஒருங்கிணைப்பாளா், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 625 020 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 99941 23091 என்ற எண்ணிலோ வருகிற ஏப். 5 ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தா... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க