செய்திகள் :

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், மேட்டமலையைச் சோ்ந்த பெருமாள்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு: மேட்டமலை ஸ்ரீராம் நகரில் உள்ள பல்வேறு கட்டடங்களில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு எனக் கூறி இடம் வாங்குவோா், இங்கு வணிக அடிப்படையில் பட்டாசுகள் தயாரிப்பது சட்டவிரோதமானது. இதனால், இந்தப் பகுதியில் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகளைத் தயாரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோா், மனுதாரரின் இந்த மனுவை விருதுநகா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் பரிசீலித்து, 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமண... மேலும் பார்க்க

போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெள... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சுற்றுலாத் து... மேலும் பார்க்க