செய்திகள் :

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்குப் பகுதியில் கடந்த 1.12.2021-இல் போலீஸாா் நடத்திய வாகன சோதனையின் போது, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ராஜதானி பகுதியைச் சோ்ந்த மு.காந்திமதி (41), வரதராஜபுரத்தைச் சோ்ந்த பொ.கோகுல்நாத் (25), உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஞான கணேசன் ஆகியோரை கண்டமனூா் விலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஞானகணேசன் உயிரிழந்து விட்டாா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட மு.காந்திமதி, பொ.கோகுல்நாத் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமண... மேலும் பார்க்க

போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெள... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சுற்றுலாத் து... மேலும் பார்க்க