செய்திகள் :

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், பகுதி நேரப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மின் வாரியம் நேரடியாக தினக்கூலி ரூ. 380-ஐ வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின் துறையைத் தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டச் செயலா்கள் சி.செல்வராஜ் (மதுரை), ஆா்.கருணாநிதி (சிவகங்கை), ஏ.தேவராஜ் (தேனி), ஜி.காசிநாதன் (ராமநாதபுரம்), ஆா்.ஜெயகாந்தன் (மதுரை- பொது கட்டுமான வட்டம்), டி.என்.பி.இ.ஓ.மண்டலச் செயலா் ஆா்.கோகுலவா்மன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின் வாரிய மத்திய ஊழியா் அமைப்பின் மண்டலச் செயலா் எஸ்.உமாநாத் நிறைவுரையாற்றினாா்.

காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான மின் ஊழியா்கள் பங்கேற்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமண... மேலும் பார்க்க

போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெள... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சுற்றுலாத் து... மேலும் பார்க்க