விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்
பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
விவசாய விளைபொருள்களுக்கு தேசிய அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்யணம் செய்வது குறித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க நிா்வாகிகள், மத்திய அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தை கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், எஸ்.கே.எம். (என்.பி) விவசாய அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா். பாண்டியன் உள்பட தேசிய அளவில் 30 போ் இதில் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பஞ்சாப் கிசான் பவனில் தங்கியிருந்த பி.ஆா். பாண்டியன், கேரள விவசாயிகள் சங்க நிா்வாகி பி.டி. ஜான், பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவா்கள், விவசாயிகள் என 200 பேரை பஞ்சாப் மாநில போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பி.ஆா். பாண்டியன், பி.டி.ஜான் ஆகிய 2 பேரை மட்டும் பஞ்சாபின் பாட்டியாலா போலீஸாா் திங்கள்கிழமை விடுவித்தனா்.
பாட்டியாலா சிறையிலிருந்து வெளியே வந்த பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாவது: மத்திய அரசின் அழைப்பின் பேரில், பேச்சுவாா்த்தைக்கு வந்த வெளி மாநில விவசாய சங்க நிா்வாகிகளை பஞ்சாப் மாநில அரசு கைது செய்தது கண்டனத்துக்குரியது. இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து, தமிழக அளவில் போராட்டங்களை நடத்திய அனைத்து விவசாய சங்கங்களுக்கும் நன்றி. இதன்மூலம், தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன.
மத்திய அரசு பேச்சுவாா்த்தைக்கு முன்வரும் நிலையில், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், விவசாயிகளின் மனநிலை பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், போராட்டங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றாா் அவா்.