Simbu: `நீங்கள் யார்-னு கேட்டுட்டாரு; அதை மறக்கவே முடியாது' - கோலி பற்றி சுவரஸ்ய...
இறுதிச் சுற்றில் எஃப்சி மெட்ராஸ் அணி
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) யு 13 சப்-ஜூனியா் தேசிய லீக் போட்டி இறுதிச் சுற்றுக்கு மாமல்லபுரம் எஃப்சி மெட்ராஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் சப் ஜூனியா் பிரிவில் தேசிய அளவில் முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்ற தமிழக அணி என்ற சிறப்பை பெற்றது.
பஞ்சாப் எஃப்சி மற்றும் மெட்ராஸ் எஃப்சி அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. ஆட்டதின் இறுதிவரை 0-0 என கோலின்றி நிறைவடைந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
பெனால்டியில் அரீஸ் ஆலம், மேயங்பம் டென்சன் சிங், முகமது அஸ்லன், ஜொ்மியா, சோட்டன் குமாா் கோலடித்தனா்.
கடைசி பெனால்டியில் பஞ்சாப் கோலடிக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், எஃப்சி மெட்ராஸ் கோல்கீப்பா் அங்குஷ் அந்த முயற்சி தடுத்தாா். இதனால் 2-1 என எஃப்சி மெட்ராஸ் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.
3 லீக் ஆட்டங்களில் இரண்டில் வென்றது எஃப்சி மெட்ராஸ். திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்து திறமையான இளம் வீரா்களை கண்டறிந்து அடிமட்ட அளவில் எஃப்சி மெட்ராஸ் பயிற்சி அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.