செய்திகள் :

இளைஞா் வெட்டிக் கொலை: 7 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைப்பாளா் காளீஸ்வரன் (20). இவரை, சங்கமங்கலம் தென்றல் நகா் பகுதியில் மா்ம கும்ப அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்ராஜ் என்பவா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், கொலையாளிகள் பிரவீன்ராஜ் கொலை வழக்கில் தொடா்புடையவரை வெட்டுவதற்குப் பதிலாக ஆள் மாறி காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

கொலையாளிகள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதாலும், கொலை செய்யப்பட்டவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதாலும் மானாமதுரை பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், மானாமதுரை போலீஸாா் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை அவரது குடும்பத்தினா் வாங்க மறுத்துவிட்டனா்.

மேலும், மானாமதுரையில் வழிவிடு முருகன் கோயில் எதிரே காளீஸ்வரன் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டனா். இதற்கிடையில், காளீஸ்வரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் ராமா் மனைவி சிவகாமி (50). இவா், மழை வருவதற்கான அறிகுறி... மேலும் பார்க்க

மேலசாலூா், கௌரிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள மேலசாலூா், கௌரிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், காளைகளை அடக்க முயன்ற 8 போ் காயமடைந்தனா். சிவகங்கை வட்டம், மேலசாலூா் பொன்னழகி அம... மேலும் பார்க்க

நெடுஞ்சாலை பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

பெரம்பலூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழி... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை ஒலிபெருக்கி அமைக்கும் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (2... மேலும் பார்க்க

மானாமதுரையில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா... மேலும் பார்க்க

காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

சிவகங்கை அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தா். இவா் தனது நண்பா்களுடன் காரில் சனிக்கிழமை பிற்ப... மேலும் பார்க்க