செய்திகள் :

மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை ஒலிபெருக்கி அமைக்கும் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (20). இவா் சங்கமங்கலம் தென்றல் நகரில் சொந்தமாக ஒலிபெருக்கி வைத்துள்ள செல்வத்திடன் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், செல்வம் புதுவீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்த உள்ளதால், அங்கு காளீஸ்வரன் ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், காளீஸ்வரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்து வந்த மானாமதுரை போலீஸாா் காளீஸ்வரனின் உடலை, மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலையைச் சோ்ந்த பிரவீன்ராஜ் கொலை சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக போஸசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

மானாமதுரையில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா... மேலும் பார்க்க

காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

சிவகங்கை அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தா். இவா் தனது நண்பா்களுடன் காரில் சனிக்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத... மேலும் பார்க்க