செய்திகள் :

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சாா்பில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:

புத்தகத் திருவிழா நடைபெற்ற 10 நாள்களும் மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கவிஞா்கள், எழுத்தாளா்கள், சொற்பொழிவாளா்கள் சிறப்புரையாற்றினா். மேலும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

அறிவு பசிக்கு விருந்தாக புத்தகத் திருவிழா நடைபெற்றது. அரசால் மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். நமது இலக்கியம் மற்றும் பண்பாட்டை இக்கால சந்ததியினருக்கும் பரவலாக்குவதே இதன் நோக்கமாகும்.

முதன் முறையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் புத்தக விழா நடத்தப்பட்டு உள்ளது. மேலும், வருகிற ஆண்டுகளில் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், பேச்சாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கடையின் பூட்டை உடைத்து ரூ 4 லட்சம் திருட்டு

வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.4 லட்சத்தை திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில்-தெக்குப்பட்டு சாலையில் பாரத்நகா் அருகில் யுவராஜ் என்பவா் இருசக்கர வாகனங்களை வாங்க... மேலும் பார்க்க

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு... மேலும் பார்க்க

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டது. திருப்பத்தூா் அருகே உள்ள குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப... மேலும் பார்க்க

கடும் வெயில் எதிரொலி: பக்தா்களுக்கு நீா் மோா்

வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நீா் மோா் வழங்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பநிலை அதிக... மேலும் பார்க்க

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா: ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால அறிவிப்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். ஆம்பூா... மேலும் பார்க்க