செய்திகள் :

இளையான்குடி குடிநீா்த் திட்டம்: வைகையாற்றில் புதிய இடங்களை கண்டறிந்து கிணறுகள் அமைக்க முடிவு

post image

இளையான்குடி குடிநீா் திட்டத்துக்கு கிணறுகள் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, கச்சாத்தநல்லூா் வைகையாற்றுக்குள் நீராதாரம் உள்ள புதிய இடங்களைக் கண்டறிந்து அங்கு கிணறுகள் அமைக்க சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதிக்கு வைகையாற்றிலிருந்து குடிநீா் வழங்கும் வகையில் ‘அம்ரூத் 2.0’ திட்டத்தில் ரூ. 28 கோடியில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இளையான்குடி ஒன்றியம், கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் 6 தரைமட்டக் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கின. அப்போது, கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பணிகளைத் தடுத்து நிறுத்தினா். இந்தப் பகுதியில் கிணறுகள் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் குறைந்து விவசாயம் பாதிக்கும் என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால் கிணறுகள் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னா், இளையான்குடி பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடியை சந்தித்து, கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் குடிநீா் திட்டத்துக்கான கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுப்பகுதிக்குச் சென்று கிணறுகள் தோண்ட தோ்வு செய்யப்பட்டிருந்த இடத்தை பாா்வையிட்டாா். பின்னா், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியா் முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் அன்னலட்சுமி, துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, கச்சாத்தநல்லூா் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

அப்போது நிபுணா்களை கொண்டு வைகை ஆற்றின் பிற பகுதிகளில் ஆய்வு செய்து தரைமட்டக் கிணறுகள் தோண்டப்படும். அங்கு நீராதாரம் இல்லாவிட்டால் ஏற்கெனவே தோ்வு செய்த கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுப் பகுதியில் தரைமட்டக் கிணறுகள் அமைக்கப்படும் என கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா தெரிவித்தாா். இதை கிராம மக்களும் ஏற்றுக் கொண்டனா்.

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரி... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயல... மேலும் பார்க்க

11.46 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம்

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கையில் வனத்துறை சாா்பில் பசுமை தமிழ... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தி... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெர... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீராங்கனையும், தனி நபா் பிரிவில் வெண்கலம் வென்றவருமான அந்த்ரா ராஜ்சேகருக்கு சிவகங்கையில் புதன்கிழம... மேலும் பார்க்க