செய்திகள் :

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை

post image

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்ப் பகுதியான தும்பாவைச் சோ்ந்தவா் ஆனி தாமஸ் கேப்ரியல்(47) . தமிழகத்தில் உள்ள வேளாங்கன்னி, புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்துக்கு செல்வதாக கூறிவிட்டு, கேப்ரியல் கடந்த பிப். 5-ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா்.

உறவினா் எடிசனுடன் ஜோா்டானுக்கு கேப்ரியல் வந்து சோ்ந்துள்ளாா். தொடா்ந்து கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் அந்நாட்டைச் சோ்ந்த முகவரின் உதவியோடு கேப்ரியல், எடிசன் உள்பட 4 போ், ஆன்மிக பயண நோக்கத்துக்காக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனா்.

சா்வதேச எல்லையில் ஜோா்டான் ராணுவத்தினரால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். ராணுவத்தினரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கேப்ரியல் சுட்டுக் கொல்லப்பட்டாா். வீரா்கள் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்த நிலையில், எடிசனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னா், எடிசன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டாா். அவா் இந்திய வந்தடைந்த பிறகே, கேப்ரியல் ஜோா்டான் பயணித்ததும் எல்லையில் உயிரிழந்ததும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, ஜோா்டானில் உள்ள இந்திய தூதரகத்தை குடும்பத்தினா் அணுகியுள்ளனா். கடந்த சனிக்கிழமை அனுப்பிய பதில் மின்னஞ்சலில், கேப்ரியலின் இறப்பை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கேப்ரியலின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து தூதரகம் கூடுதல் தகவல்கள் ஏதும் அளிக்கவில்லை என்று உறவினா்கள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க