செய்திகள் :

'உங்களால் தான் அமெரிக்காவில் நிறைய மக்கள் இறந்துள்ளனர்...' - ட்ரூடோவிடம் போனில் பேசிய ட்ரம்ப்!

post image

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பும், பின்பும் ட்ரம்ப் கடுமையாக சாடி வந்த நாடுகளில் ஒன்று, கனடா.

ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வார்த்தை போர்கூட நடந்தது. இந்த நிலையில், நேற்று கனடா பிரதமர் ட்ரூடோ அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு போன் செய்துள்ளார். இந்த அழைப்பு கிட்டத்தட்ட 51 நிமிடங்கள் நீண்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ வரி விதிப்பு குறித்து போன் செய்து பேசினார். நான் அவரிடம், 'கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியே வந்த ஃபென்டனைல் போதை மருந்தால் பலர் இறந்திருக்கிறார்கள்' என்று கூறினேன்.

நிலைமை தற்போது ஓரளவு சரியாகிவிட்டது என்று கூறினார். 'ஆனால், அது போதாது' என்று கூறினேன். எப்படியோ, அந்த போன்கால் நட்பு ரீதியில் தான் முடிந்தது. கனடாவில் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அவரால் என்னிடம் கூறமுடியவில்லை. அதனால், 'அப்படி என்ன போய்க்கொண்டிருக்கிறது?' என்ற ஆர்வம் எனக்கு தோன்றியது. பிறகு தான், அவர் இதை அனைத்தையும் பதவியில் இருக்கத்தான் செய்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். குட் லக் ஜஸ்டின்!" என்று பதிவிட்டுள்ளார்.

"நான் ஆளுநர் (ட்ரூடோ தனது கனட பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் ட்ரம்ப் 'ஆளுநர்' என்று பதிவிட்டுள்ளார்) ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசும்போது, அவருடைய எல்லை கொள்கைகள் தான் இப்போது நமக்கும், கனடாவிற்கு இருக்கும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டேன். அவருடைய பலவீனமான எல்லை கொள்கைகளினால் தான் அமெரிக்காவிற்குள் மிக பெரிய அளவிலான ஃபென்ட்னைல், சட்டத்திற்கு புறம்பான ஏலியன்ஸ் வந்திருக்கின்றனர். அந்தக் கொள்கைகள் தான் பல மக்களின் இறப்பிற்கு காரணம்" என்று இன்னொரு ட்ரூத் வலைதள பதிவில் கூறியுள்ளார்.

Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் நீலகிரியில் நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உலக... மேலும் பார்க்க

போரில் அழிக்கப்பட்ட காஸா நகரம்: இடிபாடுகளுக்கு நடுவே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா மேலும் பார்க்க

TVK: ஒரு நாள் நோன்பு இருக்கும் விஜய்; சென்னையில் பரபரக்கும் தவெக - இஃப்தார் நிகழ்ச்சி அப்டேட்ஸ்

தவெக சார்பில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாளை மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாள் நோன்பு இருக்கும் முடிவில் விஜய் இருக்கி... மேலும் பார்க்க

Jaishankar : லண்டன் பயணத்தில் பாதுகாப்பு அத்துமீறல்; காலிஸ்தானி குழுக்களுக்கு இந்தியா கண்டனம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. The British almost allowed an att... மேலும் பார்க்க

ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறத... மேலும் பார்க்க

"உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆளுநர்தான்" - அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கு

ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்க... மேலும் பார்க்க