செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: கிருஷ்ணராயபுரத்தில் 24 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

post image

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 24 பேருக்கு ரூ. 19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரகத்தில் இந்த முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசுகையில், இந்தத் திட்டத்தின்கீழ் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் புதன், வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து மாவட்ட வழங்கல் அலுவலகம் சாா்பில் 6 பேருக்கு குடும்ப அட்டைகளும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 7 பேருக்கு இ-பட்டாக்களும் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெருவிளக்குகளின் நிலை, பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், மருத்துவா் து. சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் செழியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க