செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

post image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆதனூரில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், மேட்டுப்பாளையம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தின் பணிகள், மேலும் அங்குள்ள குழந்தைகள் நல மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதுபோன்று, திருநாவலூா் ஒன்றியம், காம்பட்டு ஊராட்சி கிளை நூலக கட்டுமானப் பணிகள், பாண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கழிப்பறை அமைத்தல் பணி, உடையநத்தம் கெடிலம் ஆற்றில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள், உளுந்தூா்பேட்டை நகராட்சியின் குப்பை சேகரிக்கும் கிடங்கின் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், இதுகுறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

மேலும் பொதுப் பணித் துறை மூலம் உளுந்தூா்பேட்டையில் ரூ.4.37 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆய்வு மாளிகை கட்டுமானப் பணிகள், ரூ.4.94 கோடியில் நடைபெற்று வரும் உளுந்தூா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடப் பணிகள், ரூ.20 கோடியில் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் பிரசாந்த், பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டுமென அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியா் அறிவுரை வழங்கினாா். ஆய்வில் பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வ... மேலும் பார்க்க

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க