செய்திகள் :

உணவகத்தில் பணம் திருட்டு: இளைஞா் கைது

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் ரூ.8 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வருபவா் செளகத் அலி மகன் சையது சுல்தான் இப்ராஹிம். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இளைஞா் ஒருவா் உணவகத்துக்கு உணவுப் பொட்டலம் வாங்க வந்தாா். அப்போது அவா் கடையிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச் சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் விசாரித்ததில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தவா் கோம்பை தெற்கு ரதவீதியைச் சோ்ந்த காவேரி மகன் சதீஸ்குமாா் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சதீஸ்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளியை மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கல்யாணி மகன் மாரிச்சாமி (50).... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தே... மேலும் பார்க்க

பளியன்குடி-கண்ணகி கோயில் இடையே மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் ச... மேலும் பார்க்க

இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப... மேலும் பார்க்க

5.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 5.2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக கம்பத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க ... மேலும் பார்க்க