செய்திகள் :

தொழிலாளியை மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது

post image

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கல்யாணி மகன் மாரிச்சாமி (50). இவா் தேவாரம் அரசு மதுக்கடை அருகே நின்றிருந்தபோது, தேனி-பழனிசெட்டிபட்டியில் வசிக்கும் ராஜா மகன் செல்வேந்திரன் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000 கேட்டாா்.

அப்போது, மாரிச்சாமி கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் வந்து அவரை மீட்டனா். இதுகுறித்து, தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வேந்திரனைக் கைது செய்தனா்.

செல்வேந்திரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் 15-க்கு ... மேலும் பார்க்க

சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் மே 7-ஆம் தேதி முதல் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது: தேனி, கரு... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்’: ஆட்சியா் ஆய்வு

பெரியகுளம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் சாா் ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இதில... மேலும் பார்க்க

வீரபாண்டி, கம்பம் கெளமாரியம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையால் கோயில், முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து கோய... மேலும் பார்க்க

ராணுவத் தோட்டா வைத்திருந்தவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸாா் சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் கரட்டுப்பட்டி விலக்கு அருகே வாக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதன... மேலும் பார்க்க