செய்திகள் :

கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது

post image

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக் சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், குடிநீா் புட்டியில் 7 லிட்டா் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டன் அருகேயுள்ள பலியன் கண்டத்தைச் சோ்ந்த ஸ்கோரியா குரியன் (55) என்பதும், இவா் கொடைக்கானலில் வட மாநிலத்தவா்களிடம் சாராயத்தை வாங்கி, அதை போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்கோரியா குரியனை கைது செய்தனா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க