செய்திகள் :

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

post image

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் 15-க்கு மேற்பட்ட வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் உள்ள தாமரைக்குளம், காந்திநகா், வெங்கடாஜலபுரம் சாலைப் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிச் செல்லும் சாலை, பெருமாள் கோயில், பாலம் நிறுத்தம், தாசில்தாா் நகா் பகுதிகளில் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தப் பகுதி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வஉசி தெருவைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

தாமரைக்குளம் பேரூராட்சிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்தச் சாலையில் நடந்துச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, தேனி மாவட்ட ஆட்சியா் இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க