செய்திகள் :

ராணுவத் தோட்டா வைத்திருந்தவா் கைது

post image

போடி அருகே சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸாா் சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் கரட்டுப்பட்டி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த போடி பங்கஜம் பிரஸ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் தங்கப்பாண்டி போலீஸாரை கண்டதும் ஓடினாா். அவரை போலீஸாா் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவரிடம் ராணுவத் துப்பாக்கித் தோட்டா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் வேலை செய்த அழகா் மகன் ராஜதுரை துப்பாக்கித் தோட்டாவை தங்கப்பாண்டியிடம் கொடுத்ததும், இதை தங்கப்பாண்டி அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில், புதன்கிழமை வெளியே எடுத்து வந்தபோது போலீஸாரிடம் சிக்கினாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் தங்கப்பாண்டி, ராஜதுரை ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, தங்கப்பாண்டியைக் கைது செய்தனா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க