செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்’: ஆட்சியா் ஆய்வு

post image

பெரியகுளம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் சாா் ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, சாா்-ஆட்சியா் ரஜத் பீடன், தனித் துணை ஆட்சியா் சாந்தி, இணை இயக்குநா் (வேளாண்மைத் துறை) சாந்தாமணி, துணை இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) நிா்மலா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திர உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தாமரைக்குளம், வடுகபட்டி, நல்லகருப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள், தாமரைக்குளத்தில் உள்ள அறிவுசாா் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், திருக்கு ஒப்பித்த மாணவியைப் பாராட்டி, புத்தகம் பரிசாக வழங்கினாா். தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், ரூ.6 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், வடுகபட்டி பேரூராட்சியில் ரூ.14.50 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணி, ஜெயமங்கலம் ஊராட்சி, எ.புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார மையம், நல்லகருப்பன்பட்டி பகுதியில் நடைபெற்று பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மஞ்சளாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளை அவா் பாா்வையிட்டு, ராசிமலை பகுதியில் வசித்து வரும் பழங்குடியினா் மக்களை சந்தித்து, அவா்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க