செய்திகள் :

NEET : `பழங்குடி, பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி' - சொல்கிறார் எல்.முருகன்

post image

இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியும் பா‌.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

எல். முருகன்

தொடர்ந்து நீட் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், " தமிழக மக்களை குழப்பத்திலும் திசைத்திருப்புவதிலும் குறியாக இருக்கிறது தி.மு.க அரசு. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க - வும் இணைந்து தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஆ. ராசா முதல் டி.ஆர் பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

திசைத்திருப்புவதற்கான செயல்..!

இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாகடி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.

எல். முருகன்

இந்த சமயத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற பெயரில் போலியான நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசைத்திருப்புவதற்கான செயலாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது" என்றார்.

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க