செய்திகள் :

காமராஜா் விருது பெற்ற பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 2.5 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாணவா்கள், ஆசிரியா்களின் வருகை, கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகள், வகுப்பறை, பள்ளி வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மாவட்டத்துக்கு தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு தோ்வு செய்யப்படும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம், உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி, மணவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளி, பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி, வாா்பட்டு அரசுத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கான நிதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அரசு வழங்கிய நிதியில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க