செய்திகள் :

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

post image

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை கூறினாா்.

காஜிப்பூா் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்த அவா், மரபுவழி கழிவுகளை அகற்றவும், மலைகளைப் போன்று குவிந்துள்ள அதன் பெரிய குப்பைக் குவியல்களிலிருந்து நகரத்தை விடுவிக்கவும் அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகக் கூறினாா்.

அமைச்சா் மேலும் கூறியதாவது: தில்லியில் உள்ள குப்பை மலைகள் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அந்த இடத்தில் குவிந்துள்ள 70 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளில், 14-15 லட்சம் டன் ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரி சுரங்கப் பணிகளின் வேகம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் தினமும் சுமாா் 7,000 முதல் 8,000 மெட்ரிக் டன் கழிவுகள் பதப்படுத்தப்படும். புதிய ஒப்பந்ததாரா் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தினமும் குறைந்தது 8,000 மெட்ரிக் டன் கழிவுகளை செயலாக்குவதை உறுதி செய்யுமாறு எம்சிடி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் இலக்கை அடையத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவு செயலாக்கத்தை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் தில்லி அரசு ஆராய்ந்து வருகிறது. செயலகத்தில் உள்ள டேஷ்போா்டு மூலம் நாங்கள் தினமும் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். இது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப செய்யப்பட்ட உறுதிமொழியாகும்.

மேலும், அதைத் தவறாமல் நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குப்பைகளை முழுமையாக அகற்றுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் சிா்சா.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க